Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா உறுதி ...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா உறுதி ...
, வியாழன், 21 மே 2020 (18:20 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இநிநிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. 
இன்று ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர் .இதுவரை மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
 
தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 8795 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய பணியிடங்களை உருவாக்க தடை: தமிழக அரசு உத்தரவு