Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு !

Advertiesment
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு !
, புதன், 1 ஏப்ரல் 2020 (18:20 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

கொரோனாவை தடுக்க  இந்தியா முழுவதும்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மக்கள் வீட்டில் இருக்காமல் வீட்டை வெளியே வந்துகொண்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க போலீஸார் ரோந்து வருகின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்விஹி மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த மாநாட்டில் பல்லாயிரக்கானவர்கள் பங்கேற்றனர். அதில், தமிழகத்தில் இருந்து 190 பேர் பங்கேற்றுள்ளனர். துரதிஷ்டவசமாக அவர்கள் அத்துனை பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் மொத்தம் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், 1,103 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசநோய் தடுப்பு மருந்து கொரோனா சிகிச்சைக்கு உதவுமா? ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆலோசனை!