Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எச்சரிக்கை: 22 விதிகளை பின்பற்றுங்கள்.. போலீஸாருக்கு டிஜிபி உத்தரவு!!!

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (21:59 IST)
கொரோனா எச்சரிக்கை: 22 விதிகளை பின்பற்றுங்கள்.. போலீஸாருக்கு டிஜிபி உத்தரவு!!!
டிஜிபி திரிபாதி, தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களை காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, காவல் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய 22 விதிமுறைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், காவல்நிலையத்துக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் மனுதாரர்களை முதலில் உடல் வெப்ப சோதனை செய்த பின்னர் அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்கள் நுழையும் இடத்தில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பார்வையாளர்களை நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில், அனுமதிக்க வேண்டும், அவர்களை குளிர்சாதன வசதிகொண்ட இடத்தில் அனுமதிக்கக் கூடாது. கேண்டீனில் மதிய நேரத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதுடன், அங்கு இடத்தில் கிருமி நாசினிகள் தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

உடற்பயிற்சி மையங்கள், பொதுவிளையாட்டுக் கூடங்கள் ஆகிய பகுதிகளை மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments