Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா, 6 பேர் பலி.. இந்தியாவில் ஜேஎன்.1 பாதிப்பு அதிகரிப்பு

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (08:10 IST)
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், டெல்லி ஆகிய பகுதிகளில் கொரோனாவால் உயிர் பலியாகியுள்ளது என்றும் ஜே.என்.1 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் புதிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம்  புனேவில் உள்ள தேசிய வைரால்ஜி ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது குறித்து அறிக்கை வந்த பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

 இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பொதுமக்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments