Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

AC-க்கு நோ.... மீண்டும் அமலுக்கு வந்தது கொரோனா கட்டுபாடுகள்!

AC-க்கு நோ.... மீண்டும் அமலுக்கு வந்தது கொரோனா கட்டுபாடுகள்!
, செவ்வாய், 21 ஜூன் 2022 (14:34 IST)
கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 686 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,61,560 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 257 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 294 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,208 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருமண மண்டபங்களில் 100 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறப்பு மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகா தின கொண்டாட்டத்தின்போது இந்தியர்கள் மீது தாக்குதல்: மாலத்தீவில் பரபரப்பு