Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை நீட்டிப்பு- தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (20:14 IST)
இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவது அலை பரவல் உள்ள நிலையில், தற்போது, நாடு  முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாநில அரசுகள் இத்தொற்றைக் குறைக்க  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பல மாநிலங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், ஜனவரி 10 ஆம் தேதி வரை துணிக்கடை நகைக்கடை, உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா பயிற்சி நிலையங்கள், சலூன்களில் 50 %பேருக்கு மட்டுமே அனுமதி ; இறப்பு சார்ந்த  நிகழ்வுகளில் 50 %பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளார்

மேலும்,மழலையர்-  நர்சரி பள்ளிகளுக்கு அனுமதி இல்லை; 1 ஆம் வகுப்பு  முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை அனுமதி இல்லை;  9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்; மெட்ரோ ரெயில்களில் 50% பெருக்கு மட்டுமே அனுமதி எனவும், . வழிபாட்டுத்தளங்களில் தற்போதுள்ள  வழிகாட்டு நடைமுறையே தொடரும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments