Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
, வியாழன், 20 ஜனவரி 2022 (21:46 IST)
தமிழகத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 28,561 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 30,42,796 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 28,561 பேர்களில் 7,520 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 19,978 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை  28,26,479 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 39 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 37,112 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனிடயே தமிழகத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. 
 
கடந்த 14 ஜனவரி 26 பேரும், 15 ஜனவரி 11 பேரும், 16 ஜனவரி 22 பேரும், 17 ஜனவரி 20 பேரும், 18 ஜனவரி 29 பேரும், 19 ஜனவரி 35 பேரும், இன்று 39 பேரும் மரணமடைந்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டோங்கா தீவு எரிமலை வெடிப்புக்கு முன்னும் பின்னும்... பகீர் புகைப்படங்கள்!