Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்கள்

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (18:27 IST)
தமிழகத்தில் 15 மாவட்டங்கள்  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்றுப் பரவியது.. தற்போது நாட்டில் கொரொனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததால் தற்போது பலி எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையில் கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் கூறியுள்ளதாவது:  நம் நாட்டில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, உள்ளிட்ட 14  மாநிலங்களில் உள்ள 90 மாவட்டங்களில்தான்  80%  கொரொனா தொற்றுப் பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தோர் விகிதம் 97.2% மாக இருக்கிறது. மேலும் இத்தொற்றில் 45% பேர்  முறையாக முகக்கவசம் அணிவதில்லை என்றும்,  63%  பேர் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதில்லை என்றும், 25% பேர் கொரொனா தடுப்பு விழிப்புணர்வைக் கடைப்பிடிப்பதில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக் குறைந்துவரும் நிலையில் அனைவரும் சமூக இடைவளியைப் பின்பற்றினால் 3 வது அலையை எதிர்கொள்ள முடியும் என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments