Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

Siva
வெள்ளி, 22 நவம்பர் 2024 (16:17 IST)
அதானி குழுமத்துடன் தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ள நிலையில், "நெருப்பில்லாமல் புகையாது" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பதிலடி கொடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

அதானி குழுமத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும், மின்வாரியம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தன்னிடம் நேரடியாக அல்லது மின்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெளிவு பெறாமல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது" என்று தெரிவித்தார்.

இதே போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக இருந்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்யுமாயின், உண்மை நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உண்மையாக ஊழல் நடந்திருக்கிறதா என்பதை நீதியரசர்கள் தாமாக முன்வந்து ஆய்வு செய்ய வேண்டும்.

அமெரிக்க நீதிமன்றமே இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதால், 'நெருப்பில்லாமல் புகையாது' என்ற பழமொழி பொருந்துகிறது. தமிழக அரசு இதுகுறித்து உரிய விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும்," என்றார்.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments