Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கை!.. யோசிக்கும் திமுக!.. இன்று கிளைமேக்ஸ் பேச்சுவார்த்தை!..

Advertiesment
stalin rahul
40 தொகுதிகள், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு, 2 ராஜ்யசபா என பல காங்கிரஸ் கேட்பதால் திமுக  - காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா தொகுதிகலையும் கொடுப்பதாக திமுக சொன்னது. அதன்பின் நேற்று மதியம் 12.30 மணியளவில் பா.சிதம்பரம் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது 28 தொகுதிகளை கொடுக்க ஸ்டாலின் முன் வந்ததாக தெரிகிறது..

அதன்பின் நேற்று மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் ஸ்டாலின், கனிமொழி, ப.சிதம்பரம் ஆகிய எல்லோரும் கலந்து கொண்டனர்.. அப்போதும் தொகுதி பங்கீடு பற்றி சிதம்பரத்துடன் ஸ்டாலின் பேசியதாக தெரிகிறது. அப்போது காங்கிரஸ் மேலிடம் 30 தொகுதிகளை எதிர்பார்க்கிறது என சிதம்பரம் சொல்ல ஸ்டாலின் ‘நாங்கள் 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறோம்.. உங்களுக்கு 30 என்றால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டும்.. அது எப்படி முடியும்?’ என கேட்டிருக்கிறார்..

அப்போது நீங்கள் நினைத்தால் முடியும் என சிதம்பரம் சொல்ல, இன்று மீண்டும் உங்கள் பேச்சுவார்த்தை குழுவை அறிவாலயத்துக்கு அனுப்புங்கள் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறாராம். எனவே, செல்வபெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் குழு இன்று மீண்டும் அறிவாயம் சென்று தொகுதி பங்கீடு பற்றி பேசவிருக்கிறார்கள்.. அனேகமாக இந்த குழுவில் கிரிஷ் சோடங்கர் இருக்க மாட்டார் என்கிறார்கள்..

மேலும் காங்கிரசுக்கு 29 தொகுதிகளை திமுக ஒதுக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
அனேகமாக இன்றோடு திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நிலவும் இழுபறி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

TVK: சோழ தேசமான தஞ்சையில் தவெக பொதுக்கூட்டம்!.. என்ன பேசப்போகிறார் விஜய்?..