Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிப்பு.. காங்கிரஸ் போராட்டத்தால் பரபரப்பு..!

Mahendran
புதன், 10 ஜூலை 2024 (15:32 IST)
நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
செல்வப்பெருந்தகை குறித்து அண்ணாமலை விமர்சித்ததை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் திடீரென அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. உடனே உருவ பொம்மையை பறித்து, போலீசார் தீயை அணைத்தனர்.  
 
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி, 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் செய்து வருகின்றனர்.
 
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்ற வழக்குகளில் உடையவர் என்று அண்ணாமலை சமீபத்தில் கூறினார். அதற்கு என்ன ஆதாரம் என்று செல்வப்பெருந்தகை கூறிய போது தனது சமூக வலைதலை பக்கத்தில் செல்வப்பெருந்தகை மீது என்னென்ன வழக்குகள் இருக்கிறது என்பதை பட்டியலிட்டார். 
 
இந்த பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments