Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிப்பு.. காங்கிரஸ் போராட்டத்தால் பரபரப்பு..!

Mahendran
புதன், 10 ஜூலை 2024 (15:32 IST)
நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
செல்வப்பெருந்தகை குறித்து அண்ணாமலை விமர்சித்ததை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் திடீரென அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. உடனே உருவ பொம்மையை பறித்து, போலீசார் தீயை அணைத்தனர்.  
 
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி, 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் செய்து வருகின்றனர்.
 
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்ற வழக்குகளில் உடையவர் என்று அண்ணாமலை சமீபத்தில் கூறினார். அதற்கு என்ன ஆதாரம் என்று செல்வப்பெருந்தகை கூறிய போது தனது சமூக வலைதலை பக்கத்தில் செல்வப்பெருந்தகை மீது என்னென்ன வழக்குகள் இருக்கிறது என்பதை பட்டியலிட்டார். 
 
இந்த பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம்.! தலையிட கோரி பிரதமர் - ஜனாதிபதிக்கு மருத்துவர்கள் கடிதம்..!!

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்..! ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி நாளை பரப்புரை..!!

சிறைகளால் என்னை பலவீனப்படுத்த முடியாது.! தேச விரோத சக்திகளுக்கு எதிராக போராடுவோம்.! கெஜ்ரிவால்...

மக்கள் பிரச்சனைகளில் எந்த வித ஈடுபாடும் விஜய்க்கு இல்லை.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு..!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ஒருநாள் மட்டும் ரத்து.. எந்த நாள்? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments