Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்கு என்றும் துணை நிற்போம்..! – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:17 IST)
ஜெய்பீம் படம் தொடர்பாக சூர்யா மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு அளிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் “மனிதத்தை நேசிக்கும் அனைவரும் தன்னோடு இருக்கிறார்கள் என்பதை சூர்யா நினைவில் கொண்டு, அச்சுறுத்தல்களை புறந்தள்ளி சமூக அக்கறையுள்ள படங்களைத் தர வேண்டும். அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் என்றும் துணை நிற்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? விளக்கமளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments