Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யாவுக்கு என்றும் துணை நிற்போம்..! – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

Advertiesment
சூர்யாவுக்கு என்றும் துணை நிற்போம்..! – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!
, செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:17 IST)
ஜெய்பீம் படம் தொடர்பாக சூர்யா மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு அளிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் “மனிதத்தை நேசிக்கும் அனைவரும் தன்னோடு இருக்கிறார்கள் என்பதை சூர்யா நினைவில் கொண்டு, அச்சுறுத்தல்களை புறந்தள்ளி சமூக அக்கறையுள்ள படங்களைத் தர வேண்டும். அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் என்றும் துணை நிற்கும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!