இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (09:49 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
 தற்போது நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் பொது மருத்துவர்கள் மற்றும் சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் நல்லக்கண்ணு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments