Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உ.பி.யில் காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கர் சிலை

Advertiesment
உத்திர பிரதேசம்
, செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (08:58 IST)
உத்திர பிரதேசத்தில் கடந்த மாதம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தலைவர்களின் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. தமிழகத்தில் பெரியார் சிலை, கேரளாவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.
 
இந்நிலையில் கடந்த மாதம் உத்திர் பிரதேச மாநிலம், படாவுன் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை  மர்ம நபர்கள் உடைத்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை வைத்து  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இதனையடுத்து படாவுன் நகரில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை மாவட்ட நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டுள்ளது. நீல நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு தற்போது காவி நிற வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு ரூ.1 லட்சம்: சென்னை கேந்திரியா வித்யாலா பள்ளி முதல்வர் கைது