Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு... நண்பர்களே கொலை செய்து புதைத்தது அம்பலம்..!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (14:50 IST)
தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் அவரை அவரது நண்பர்களே கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி என்ற பகுதியைச் சேர்ந்த ஜெகன்ஸ்ரீ என்ற தனியார் கல்லூரி மாணவர் திடீரென காணாமல் போனார். இதனை அடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்தனர்
 
இந்த நிலையில் ஜெகனின் நண்பர்கள் 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவர்கள் தான் ஜெகனை கொலை செய்தது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக மது போதையில் ஜெகனை அடித்து கொலை செய்துவிட்டு வனப்பகுதியில் புதைத்ததாக நான்கு பேரும் ஒப்புக்கொண்டனர். 
 
இதனை அடுத்து நான்கு பேரை கைது செய்த போலீசார் ஜெகனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments