Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் பெற்ற புகாரில் கல்லூரி முதல்வர்,பேராசிரியர் சஸ்பெண்ட்

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (14:12 IST)
உதகையில் அரசுக் கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி, தாவரவியல் துறை பேராசியர் ரவி ஆகியோர் லஞ்சம் பெற்ற புகாரில் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர்.

உதகையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்குவதற்காக பரிந்துரை கடிதம் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக முதல்வர் அந்தோணியும், மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுக்கு மாறுவதற்காக மாணவர்களிடன் லஞ்சம் பெற்ற புகாரில் தாவரவியல் பேராசிரியர் ரவி மீது புகார் எழுந்தது.

இப்புகாரின் அடிப்படையில்,  முதல்வர் மற்றும் பேராசிரியர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களிடம் இருந்து கூகுள் பே மூலமாகவும், ரொக்கமாகவும் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments