Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூம்புகார் கல்லூரிக்கு விடப்பட்ட விடுமுறை ரத்து- கல்லூரி முதல்வர்

poombukar
, புதன், 15 பிப்ரவரி 2023 (14:44 IST)
சீர்காழி அடுத்துள்ள மேலையூரில் இந்து சமய அற  நிலையத்துறைக்குச் சொந்தமான பூம்புகார் அரசுக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் அப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தக் கல்லூரியில், குடிநீர், சாலை, கழிப்பறை, உள்ளிட்ட அடிபப்டை வசதிகள் இல்லாததாலும், வகுப்பறை இருக்கைகள், ஆய்வுக்கூடம், உள்ளிட்ட வசதிகள் செய்து தராத கல்லூரி முதல்வர் அறிவொளியை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக  மாணவர்கள் அறிவித்து கல்லூரி வாயிலில்  அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

எனவே  இன்று முதல்( 15,16,17) அடுத்த  மூன்று  நாட்களுக்கு விடுமுறை அறிவித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பூம்புகார் அரசுக் கல்லூரிக்கு விடப்பட விடுமுறையை ரத்து செய்து தற்போது கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

நாளை முதல் வழக்கம்போல் வகுப்புகள் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2022-23ஆம் ஆண்டுக்கான வருமான வரித்தாக்கல் படிவங்கள் வெளியீடு..!