Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை
, வியாழன், 12 மே 2022 (14:39 IST)
தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
ஆம் தமிழ்நாட்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் ( மே 14 ஆம் தேதி) விடுமுறை அளித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் (TANCET) தேர்வு வரும் 14 ஆம் தேதி நடைபெறுவதால், மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை ஆண்டுதோறும் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை நெருக்கடி: கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுக்குப் பின்னால் ரணில் தந்த யோசனைகளா? என்ன திட்டம்?