Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் நாலு பேருக்கு கொரோனா வந்தால் சந்தை மூடப்படலாம் – ஆபத்தில் கோயம்பேடு சந்தை!

Advertiesment
Chennai
, திங்கள், 27 ஏப்ரல் 2020 (12:43 IST)
சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து மேலும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டால் சந்தையை மூட வேண்டி வரும் என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரண்டு வியாபாரிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து இன்று மாநகராட்சி ஆணையர் ஆலோசித்த நிலையில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலோசனை கூட்டம் மீண்டும் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் “ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் தொட்டு ஒருநாள் கூட கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இரண்டு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால் கோயம்பேடு மார்க்கெட்டை மூட வேண்டி வரும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Uninstall Whatsapp: அமிதாப் பச்சனால் வாட்ஸ் ஆப்பிற்கு வந்த சோதனை!!