Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவை பிரதமர் ரோட் ஷோவில் பள்ளி குழந்தைகள்; கடும் நடவடிக்கை வேண்டாம் - உயர்நீதிமன்றம்

கோவை பிரதமர் ரோட் ஷோவில் பள்ளி குழந்தைகள்; கடும் நடவடிக்கை வேண்டாம் - உயர்நீதிமன்றம்

Mahendran

, வெள்ளி, 29 மார்ச் 2024 (16:54 IST)
கோவையில்  பிரதமர் ரோட் ஷோவில் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடும் நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இந்த வழக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
கோவையில் பிரதமர் ரோட் ஷோவில் பள்ளி குழந்தைகளை அழைத்து சென்றதாக பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தனியார் பள்ளி தலைமையாசிரியை புகழ் வடிவு மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் ஏப்ரல் 3ம் தேதிக்குள் பதிலளிக்க கோவை போலீசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஏப்ரல் 3ம் தேதி வரை பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் அப்பாவின் கனவை செஞ்சு காட்டலைன்னா.. நான் வீரப்பனுக்கு பொறக்கல..! – சவால் விட்ட வித்யா வீரப்பன்!