Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'கோவை குண்டுவெடிப்பு வழக்கு' - குற்றவாளி மரணத்திற்கு சிறைத்துறையே காரணமா?

'கோவை குண்டுவெடிப்பு வழக்கு' - குற்றவாளி மரணத்திற்கு சிறைத்துறையே காரணமா?
, வியாழன், 6 அக்டோபர் 2016 (01:28 IST)
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஆறாவது குற்றவாளியாக கைது செய்யபட்டிருந்த கரும்புகடையை சேர்ந்த அப்துல் பசீர் என்பவர் கடந்த 16 ஆண்டுகளாக  சிறையில் அடைக்கபட்டிருந்தார்.

 
 
இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கபட்டதால் சிறையில் முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டுள்ளது. 
 
பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இதனிடையே பஷீர் மரணத்திற்கு சிறைத்துறையே காரணம் என புகார் தெரிவித்து இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
அவரது உடல் வைக்கபட்டுள்ள கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கபட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 முதல் 16 ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை!