Publish Date: Tue, 02 May 2023 (11:10 IST)
Updated Date: Tue, 02 May 2023 (11:11 IST)
நிதி அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்யப்படுகிறது என முதலமைச்சர் முக ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.
மேலும் பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் யாருக்கும் விளம்பர தேடி கொடுக்க தனக்கு விருப்பமில்லை என்றும் மக்களுக்கான பணிகளை செய்யவே தனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றும் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பழனியில் தியாகராஜன் இரண்டு முறை விளக்கம் கொடுத்துவிட்டதால் அது குறித்து மேலும் விளக்கம் அளிக்க தான் தயாராக இல்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்
மேலும் பிடிஆர் ஆடியோ விகாரத்தில் மட்டமான அரசியல் நடப்பதாகவும் அவர் காட்டமாக கூறினார். இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசிய நிலையில் ஆடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது