Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் நிலைமை விரைவில் சீரடையும்: முதல்வர் ஸ்டாலின் பதிவு..!

Advertiesment
MK Stalin
, வியாழன், 7 டிசம்பர் 2023 (06:45 IST)
சென்னையில் நிலைமை விரைவில் சீரடையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் நிலைமை விரைவில் சீரடையும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் தான் வெள்ள நீர் தேங்கியிருக்கும் இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் புயல் மற்றும் பெரு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலை பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்க களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்’ என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்: கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ்