Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (10:24 IST)
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும்,  ஆளுநர் மாளிகைக்கு வெளியே தெருவில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது  என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் இன்று தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் மரியாதை செலுத்தி விட்டு பேசிய போது  முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறுகையில், ‘ஆளுநர் மாளிகையில் இருந்து பொய் தகவல் பரப்பப்படுகிறது என்றும், ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறி வருகிறது எனவும் குற்றஞ்சாட்டினார்.
 
முன்னதாக பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்திற்கு முதல்வர் வருகை தந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையை முதல்வர் ஸ்டாலின் செலுத்தினார்.
 
மேலும் தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியது திமுக அரசு என முதல்வர்  ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments