Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா சம்பவம்: யூடியூப் பார்த்து வெடிகுண்டு செய்ய கற்று கொண்டதாக வாக்குமூலம்..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (10:19 IST)
கேரளா மாநிலத்தின்  களமசேரியில் வெடித்த வெடிகுண்டுக்கு டொமினிக் மார்ட்டின் ரூ.3 ஆயிரம் செலவிட்டதாகவும் யூ டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொண்டதாகும் போலீசாரின் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

குண்டு வெடித்த ஜெப கூட்டத்தில், மார்ட்டினின் மாமியார் பங்கேற்று இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெப கூட்டத்தில் தனது மாமியார் பங்கேற்று இருந்தது தெரிந்தும், முடிவில் இருந்து மார்ட்டின் பின்வாங்கவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்த்திய மார்ட்டின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது உபா சட்டத்தின் கீழ் பிரிவு 16 (1ஏ) மற்றும், இந்திய தண்டனை சட்டம் 302, 307 மற்றும் 3 பிரிவு ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments