Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவு நேர ஊரடங்கு ரத்தா? நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை!

இரவு நேர ஊரடங்கு ரத்தா? நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை!
, புதன், 26 ஜனவரி 2022 (11:22 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகியவை ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த ஊரடங்கை நீடிப்பதா அல்லது தளர்வுகள் அறிவிப்பதா? என்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை செய்ய உள்ளார்.
 
மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை செய்த பின்னர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஞாயிறு அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றும்  இரவு நேர ஊரடங்கிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு - இந்திய நிலவரம்!