Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜி.எஸ்.டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது.. முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
M.K. Stalin

Mahendran

, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (15:02 IST)
மாநிலங்களின் வருவாய் நலன்களை பாதுகாக்காமல், ஜி.எஸ்.டி முறையில் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:
 
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு சீர்திருத்தங்களின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், "மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்கும் வகையிலான திட்டங்களை வகுக்க, அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் ஆதரவைக் கோரும் வரைவு ஒன்று ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
 
மாநிலங்களின் வருவாயைக் குறைத்து, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை மட்டும் அமல்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் பயன் சாமானிய மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும், அதே சமயம் மாநிலங்களின் வருவாய் நலன்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்தக் கருத்துக்கள், மத்திய அரசு முன்மொழிந்த ஜி.எஸ்.டி. வரி விகித சீரமைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூடி விவாதித்த பிறகு வெளியாகியுள்ளன. இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் வரவேற்கத்தக்கது என்றாலும், மாநிலங்களின் நிதிப் பாதுகாப்பிற்கு மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்க அடிச்சா அங்க வலிக்கும்! கோகோ கோலா, பெப்சிக்கு தடை! - பல்கலைக்கழகம் அதிரடி!