Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்போதைக்கு 20 லட்சம் தடுப்பூசி உடனடி தேவை – பிரதமருக்கு எடப்பாடியார் அவசர கடிதம்

இப்போதைக்கு 20 லட்சம் தடுப்பூசி உடனடி தேவை – பிரதமருக்கு எடப்பாடியார் அவசர கடிதம்
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (11:01 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க கோரி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தடுப்பூசியில் முன்கூட்டியே 20 லட்சம் தடுப்பூசிகளை அவசரமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசி என 10 நாட்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதால் தடுப்பூசிகளை விரைவாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசே, இந்த செய்தி உங்களுக்குத்தான்’ - ராகுல் காந்தி ட்வீட்