Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டா? சென்னை ஐகோர்ட் அதிரடி

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (11:30 IST)
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கடந்த சில நாட்களாக போராட்டம் வலுத்து வரும் நிலையில் அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் திடீரென கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

 
இந்த நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பதவிப் பிரமாணம், ரகசியக்காப்பு பிரமாணத்தை மீறி உண்ணாவிரதம் இருப்பதாக சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள சென்னை ஐகோர்ட், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட அனைவருக்கும் உண்ணாவிரதம் இருக்க உரிமை உள்ளது என்றும், அவர்கள் முதல்வர், துணை முதல்வராக இருந்தாலும் அவர்களும் இந்திய பிரஜை என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments