சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

Siva
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (12:29 IST)
வங்க கடலில் தோன்றிய புயல் சின்னம் காரணமாக சென்னையில் கனமழை பெய்த நிலையில் மூன்று சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

* ரங்கராஜபுரம், கெங்குரெட்டி, மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கி உள்ளதால், அழகப்பா சாலை, லூப் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

* பர்னாபி சாலை, நாகேஸ்வரா பூங்கா, அண்ணா மேம்பாலம் சர்வீஸ் சாலை, ஸ்ரீ மான் ஸ்ரீநிவாசா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

* திருமலைபிள்ளை சாலையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அழகப்பா சாலை மூடப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக திரும்பி நாயர் பாயிண்ட் சென்று ஈ.வி.ஆர்., சாலையை அடையலாம்.

 லூப் சாலை மூடப்பட்டது. அவ்வழியாக வரும் வாகனங்கள் சாந்தோம் ஹை ரோடு வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments