Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

Siva
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (11:36 IST)
விழுப்புரத்தில் தொடர்ச்சியாக 30 மணி நேரம் மழை பெய்து வருவதாகவும், அதேபோல் புதுவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரம் முழுவதும் மழைநீர் தேங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மழை தொடங்கிய நிலையில், முப்பது மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும், இதன் காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஐந்து அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாக மாறி இருப்பதாகவும், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும்,  கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அதிகபட்சமாக 210 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், தற்பொழுது 460 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதுவை கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்து வருவதோடு, பாண்டி மெரினாவில் சாலை வரை அலைகள் வந்து செல்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments