Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை.. இளைஞர் போக்சோ வழக்கில் கைது !

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (14:38 IST)
திருவாரூர் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, தீனதயாளன் என்ற இளைஞரை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் (15) உள்ளார். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

தந்தை மூர்த்தி 2 ஆண்டுகளுக்கு முன் மறைந்த நிலையில், தாயும் மகளும் வசித்து வந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் தீன தயாளன் (19) மாணவியுடன் பழகி வந்ததாகவும், இதற்கிடையில்  நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ALSO READ: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த 23 வயது இளைஞர்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை
 
இதுபற்றி, மாணவியின் தாய் மகேஷ் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்ததன் பேரில், தீனதயாளன் மீது வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments