Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசிக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை!

Advertiesment
மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசிக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை!
, சனி, 1 அக்டோபர் 2022 (08:52 IST)
மலையாள நடிகரான ஸ்ரீநாத் பாசி சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கி கைதானார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஸ்ரீநாத் பாசி. அவர் நடித்துள்ள சட்டம்பி என்ற படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் கலந்துகொண்ட போது ஒரு யுட்யூப் சேனல் தொகுப்பாளினி கேட்ட முட்டாள்தனமான ஒரு கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். மேலும் அவரிடம் தகாத வார்த்தைகளை பிரயோகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அவர் அளித்த புகாரில் போலிஸார் ஸ்ரீநாத்தை கைது செய்தனர். மேலும் இப்போது அவர் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அளித்த புகாரின் படி ஸ்ரீநாத் புதுப் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படங்களில் நடிக்க தடையில்லை என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லெஜண்ட் மற்றும் இரவின் நிழல் படத்தின் ஓடிடி ரிலீஸ்கள் என்னாச்சு?