Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணியில் மோதல்.. விஏஓவை அலுவலகத்தில் பூட்டி வைத்த உதவியாளர்.. பெரும் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (11:36 IST)
பணியில் ஏற்பட்ட மோதல் காரணமாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வி.ஏ.ஓவை, அவரது அலுவலகத்தில் அவரது உதவியாளரே பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் விஏஓ ஆக பணியாற்றி வரும் நிலையில், அவரது உதவியாளராக சங்கீதா என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் தமிழரசி மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் இடையே பணியின் போது மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டி சங்கீதா சென்றார்.

அப்போது கதவை திறந்து விடு இல்லையென்றால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழரசி எச்சரிக்கை செய்ததாகவும், "உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்" என்று சங்கீதா அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தாசில்தார் பூட்டை திறந்து தமிழரசியை விடுவித்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சங்கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஏஓ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments