Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா சான்ஸ் ஆசைக்காட்டி ஆபாசப்படம்! 300 பெண்களை வலையில் வீழ்த்திய போலி இயக்குனர்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (13:53 IST)
சேலத்தில் சினிமா ஆசைக்காட்டி இளம்பெண்களை ஆபாசப்படம் எடுத்த இயக்குனர் வேல்சத்ரியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் சினிமா கம்பெனி ஒன்றில் வேலை பார்த்த பெண் ஒருவர் எடப்பாடியை சேர்ந்த இயக்குனர் வேல்சத்ரியன் என்பவர் ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு மேலும் பல அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் தெரிய வந்துள்ளன. இயக்குனர் வேல்சத்ரியன் என்ற அந்த நபர் சமீபத்தில் தான் எடுக்க உள்ள திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இளம்பெண் தேவை என சமீபத்தில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.

அதை நம்பி அவரை தொடர்பு கொண்ட இளம்பெண்கள் சிலரிடம் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி அவர்களை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். பின்னர் அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பலரிடம் பணமும் பறித்துள்ளார். பலர் வெளியே சொல்ல பயந்து அவருக்கு பணம் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் வேல்சத்ரியனையும் அவரது உதவியாளரான ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர். அவர்கள் அலுவலகத்தில் இருந்த ஹார்ட் டிஸ்க்குகள், டிவிடி, லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வேல்சத்ரியனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் காவல் நிலையத்திற்கு வந்து புகாரளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments