Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்து மதத்தை விமர்சித்த கிறிஸ்தவ பாதிரியார்; மதுரையில் கைது!

Advertiesment
Tamilnadu
, சனி, 24 ஜூலை 2021 (09:01 IST)
இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தேடப்பட்டு வந்த கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாக்குமரியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கடந்த 18ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் மற்றும் பாரத பிரதமர் உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானதால் போலீஸார் தேடி வந்த நிலையில் மதுரை அருகே உள்ள கொட்டாம்பட்டியில் ஜார்ஜ் பொன்னையா பதுக்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை வைத்து தற்போது ஜார்ஜ் பொன்னையாவை போலீஸார் கைது செய்துள்ளதுடன் 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் வரலாறு காணாத மழை; பல லட்சம் பேர் வெளியேற்றம்! – மேலும் தொடரும் மழை!