Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி பொது தேர்வில் மாற்றம் - தள்ளிப்போக வாய்ப்பு!

பள்ளி பொது தேர்வில் மாற்றம் - தள்ளிப்போக வாய்ப்பு!
, வியாழன், 18 நவம்பர் 2021 (12:18 IST)
பள்ளிக்கல்வித்துறை பொதுதேர்வுக்களை நடத்துவதில் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. சமீப காலமாக மழை, பண்டிகை விடுமுறை என மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை பொதுதேர்வுக்களை நடத்துவதில் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நடப்பு கல்வியாண்டில் மார்ச்  - ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் தெரிவிக்கின்றன. 
 
இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதும் வெளியாகாத  நிலையில் இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டதும் அமைச்சர் இது குறித்து அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இருந்து 310 கிமீ தொலைவில்... நாளை அதிகாலை கரை கடக்க வாய்ப்பு!