Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள் பத்திரம்... கொரோனா 2 ஆம் அலையில் சிக்கும் பரிதாபம்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (09:12 IST)
கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.  

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 7,987 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. 
 
இதில், கொரோனாவால் பாதிப்பு அடைந்த 7,987 பேர்களில் 2,558 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. ஆம், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
1 - 8  வயதுள்ள குழந்தைகள் கொரோனாவால் இந்தாண்டு அதிகம் பாதித்துள்ளதாகவும், இது கடந்தாண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு பரவும் கொரோனாவால், பல்வேறு நோய் அறிகுறிகள் (  காய்ச்சல் , மூக்கடைப்பு , வயிற்றுப்போக்கு, தலைவலி )காட்டப்படுவதாகவும்  மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments