Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடியில் இருந்து தவறி விழுந்த 8 மாத குழந்தை – உயிர்தப்பிய அதிர்ஷ்டம் !

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (10:31 IST)
சென்னையில் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த 8 மாதக்குழந்தை ஒன்று கீழே விழுந்து உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் மிண்ட் பகுதியில் உள்ளது அடுக்குமாடி குடியிருப்பு. இதன் 5 ஆவது மாடியில் ஜினிஷா என்ற 8 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பால்கனி கம்பிகளின் இடைவெளி வழியாக கீழே விழுந்தது.

விழுந்த குழந்தை கீழே நிற்க வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ஒன்றில் விழுந்து பின்னர் தரையில் விழுந்துள்ளது. இதனால் குழந்தைக்கு பெரிதாகக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் உடனடியாக மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றபடி பயப்பட வேண்டிய அளவுக்கு எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments