Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டு தீயில் ஆயிரக்கணக்கில் பலியான கோலா கரடிகள்..

Arun Prasath
புதன், 11 டிசம்பர் 2019 (10:19 IST)
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 2,000க்கு மேற்பட்ட கோலா கரடிகள் இறந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள காடுகளில் காட்டு தீ பரவியது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாகியும் இந்த காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்த காடுகளில் கோலா கரடிகளின் வாழ்விடங்கள் உள்ள நிலையில் காட்டு தீயில் சிக்கி 2,000 க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் பலியாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காட்டுத் தீயிலிருந்து உயிர் தப்பிய கோலா கரடிகளை தன்னார்வலர்கள் மீட்டு சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்த காட்டுத் தீயில் கோலா கரடிகளின் வாழ்விடங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக சூழலியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் காட்டுத்தீ தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments