Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா செல்போனில்… அம்மா சமையலறையில் – குளியலறையில் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் !

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (11:11 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் குளியலறையில் இருந்த வாளி தண்ணிர் கீழே கொட்டி ஒன்றரை வயதுக்  குழந்தை மூச்சுத் திணறி இறந்த சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கால் எனும் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவருக்கு ஒன்றரை வயதில் அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் தனது மகனை ஆசையாகக் குளிப்பாட்டுவதற்காக நேற்று குளியலறைக்குச் சென்றுள்ளார் முருகன். அவரது மனைவி அப்போது சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். குழந்தையைக் குளிப்பாட்ட அவர் தயாராகிய போது அவரது அறையில் இருந்த அவரது செல்போன் அடித்துள்ளது. எனவே, அதை எடுக்க தனது ரூமிற்குள் சென்றுள்ளார்.

அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக வாளியில் இருந்த தண்ணீர் கவிழ்ந்து குழந்தை மேல் கொட்டியுள்ளது. இதனால் குழந்தைக்குக் கடுமையாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. முருகன் செல்போன் பேசிவிட்டு வந்து பார்க்கும் போது குழந்தை மூச்சுத்திணறலோடு பரிதாபமான நிலையில் இருந்துள்ளது.

அதைப் பார்த்து பதறிய அவர், குழந்தையை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளது. இந்த சம்பவத்தால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments