Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்திரைத் தேர்த்திருவிழா கூட்ட நெரிசலில் பலியானோர்க்கு நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

ariyalur perumal
, சனி, 16 ஏப்ரல் 2022 (23:28 IST)
மதுரை சித்திரைத் தேர்த்திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 10  பேர் காயம் அடைந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் வைகை கரையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்.

இதில், காயம் அடைந்துள்ள 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஆணையிட்டு, அவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்பதாவும்  அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை சித்திரைத் தேர்த்திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 10  பேர் காயம் அடைந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் வைகை கரையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்.

இதில், காயம் அடைந்துள்ள 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஆணையிட்டு, அவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்பதாவும்  அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகைக்காக முதாட்டி கொலை ....அதிர்ச்சி சம்பவம்