Publish Date: Sat, 18 Dec 2021 (07:03 IST)
Updated Date: Sat, 18 Dec 2021 (07:15 IST)
சென்னை மற்றும் அரக்கோணம் இடையிலான ரயில் சேவை திடீரென பாதிப்படைந்து உள்ளதை அடுத்து பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரக்கோணம் மற்றும் மோசூர் பகுதிகள் இடையே சென்னையில் இருந்து ரேணிகுண்டா செல்லும் சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக சென்னை மற்றும் அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இதனால் இன்று சென்னை - அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரயில்கள் ரத்தாக வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தடம்புரண்ட சரக்கு ரயிலை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் சென்னை - அரக்கோணம் இடையே ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.