சென்னை-புதுவை செல்லும் சாலைகள் தடுத்து நிறுத்தம்: அதிரடி நடவடிக்கை

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (19:17 IST)
சென்னையில் இருந்து புதுவை செல்லும் வாகனங்களும் புதுவையில் இருந்து சென்னை செல்லும் வாகனங்களும் கோட்டகுப்பம் என்ற பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை புதுவை இடையே மகாபலிபுரத்தில் தான் இன்று இரவு புயல் கரையை கடக்க இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி சூறாவளி காற்று மிக வேகத்தில் வீசி வருவதால் அந்த பகுதியில் அரசு போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் என்ற பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், புயல் கரையை கடக்கும் வரை கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 எனவே இன்று இரவு புதுவை செல்ல இருப்பவர்கள் பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments