Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலின் போது மின் இணைப்பு துண்டிக்கப்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (19:13 IST)
புயல் கரையை கடக்கும் போது மின்வெட்டு ஏற்படுமா என்ற கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பதில் அளித்துள்ளார். 
 
வங்க கடலில் உருவான புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் புயலின் வேகத்தை பொறுத்து மின் இணைப்பு துண்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார் 
 
புயல் காற்றின் வேகத்தை பொறுத்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்து தேவைப்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின் இணைப்பை விட மக்களின் உயிர் முக்கியம் என்பதால் அது குறித்து ஆய்வு செய்து அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments