Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுக்கே இப்படினா..? செக்கெண்ட் ரவுண்டு வேற இருக்கே: ரெய்ன் அப்டேட்!

இதுக்கே இப்படினா..? செக்கெண்ட் ரவுண்டு வேற இருக்கே: ரெய்ன் அப்டேட்!
, புதன், 29 ஜூலை 2020 (08:45 IST)
சென்னையில் பெய்யும் மழை சிலமணி நேரங்களில் நிற்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் இன்று முதல் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் படி நேற்று மாலை முதல் சென்னையில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலையில் இருந்தும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. 
 
சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, எழும்பூர், சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வேறு சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. 
 
சென்னை குரோம்பேட்டையில் நேற்று மாலை பெய்த ஒரு மணி நேரம் மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை இன்னும் சில மணி நேரத்தில் நின்றுவிடும் எனவும் பிற்பகல் முதல் நாளை அதிகாலை வரை இடியுடன் கூடிய மழை சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்ஸ் அப் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பிரசவம்: நண்பன் பாணியில் ஒரு சம்பவம்