Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் !!

சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் !!
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (09:00 IST)
சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 
சென்னையில் பல இடங்களில் நள்ளிரவு முதல் மிதமான மழை முதல் கனம்ழை பெய்து வருகிறது.  இது காலை வரை தொடர்துக்கொண்டிருக்கிறது. தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.  
 
கிண்டி, பல்லாவரம், மீனம்பாக்கம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், அசோக் நகர், கேகே நகர், பூந்தமல்லி, தாம்பரம், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இது அடுத்த 1 மணி நேரத்திற்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு சென்னை போலவே செங்கல்பட்டு மாவட்டத்திலும் மழை உள்ளதால் அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை என அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் இல்லாமல் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை கூட்டம் - சசிகலா பற்றிய பேச்சா?