Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ்கார் அந்த போனை கொஞ்சம் குடுங்க! – ஃபுல் போதையில் அட்ராசிட்டி செய்த ஆசாமி!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (10:21 IST)
சென்னையில் மதுபோதையில் காவலரை தாக்கி அவரது வாக்கி டாக்கியை பறித்த டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கோடம்பாக்கத்தில் போலீஸார் நேற்று இரவு வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக முருகன் என்பவர் கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார். அவரது வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தபோது அவர் ஒருமாதிரியாக பேசவும், அவர் மது குடித்திருப்பதை அறிந்த போலீஸார் அவரை காரை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார்கள்.

வெளியே வந்த முருகன் காவலர்களிடம் தாறுமாறாக பேசியதுடன், அங்கிருந்த காவலர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்த வாக்கிடாக்கியையும் பிடுங்கியுள்ளார். போதையில் இருந்த முருகனை வளைத்து பிடித்த போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments