Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2,500-கே டங்குவார் கிழியுது... இதுல ரூ.5,000 வேற: போங்க மிஸ்டர் உதயநிதி!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (10:04 IST)
அரசு அறிவித்துள்ள ரூ.2,500 போதாது, குடும்பத்துக்கு ரூ.5,000 கொடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 
 
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் ஜனவரியில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொங்கள் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பாக நியாய விலை கடைகள் மூலமாக பொங்கல் பொருட்கள், கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுவது வழக்கம். 
 
இந்நிலையில் வரும் பொங்கலுக்கு பொங்கல் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பின்னர் எதிர்கட்சிகளும், கூட்டணி கட்சியும் இது பொங்கல் பரிசா அல்லது தேர்தல் வருவதால் மக்களுக்கு மறைமுகமாக வழ்ங்கப்படும் லஞ்சமா என தமிழக அரசை கேள்விகளால் துளைத்து வருகின்றனர். 
 
ஆனால், அரசு அறிவித்துள்ள ரூ.2,500 போதாது, குடும்பத்துக்கு ரூ.5,000 கொடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments